இதுவரை சீனாவில் மட்டும் 2,750க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 40 நாடுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இதில் பெரும்பான்மையான பாதிப்பு சீனாவில் தான்.


கோவிட்-19 என்றழைக்கப்படும் நுரையீரல் பாதிப்பு தொடர்பான இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் மட்டும் 2,750க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.


பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இத்தாலியில் இந்த வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாக உள்ள ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் வாழும் 11 நகரங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.